பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
02:07
சிவகங்கை: திருப்புவனம் புதூரில் அமைந்துள்ள ஸ்ரீஆனந்த ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளது. சீரும் சிறப்புமிகு பாண்டிய நாட்டில் திருப்புவனம்புதூர் எனும் திவ்ய ஸ்தலத்தில் ஆலயம் அமைத்து ப்ராண ப்ரதிஷ்டை செய்து, ஸ்ரீகலங்காமல் காத்த வினாயகர், ஸ்ரீபால தண்டாயுதபாணி, ஸ்ரீதொட்டிச்சியம்மன், ஸ்ரீவீரஜக்கம்மா தேவி, ஸ்ரீதீர்த்தகரை ராக்கு மற்றும் ஸ்ரீசின்னையன், ஸ்ரீகருப்பண ஸ்வாமிகளுக்கும் (10.7.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆனந்த ஐயப்ப சுவாமியின் பஞ்சலோக விக்ரஹம் கேரளா செங்கனூர் திரு. சதாசிவம் ஆச்சாரியார் (ஸ்தபதியார்) அவர்களால் செய்விக்கப்பட்டு, சபரிமலை பம்பா ஸ்நானம், அழகர் மலை நூபுரகங்கை ஸ்நானம், ராமேஸ்வரம் தீர்த்த ஸ்நானம் மற்றும் அநேக புண்ணிய க்ஷேத்திரங்களில் எழுந்தருள செய்து பின்னர் திருப்புவனம் புதூர் வந்தடைந்து ஆனி 24-ம் தேதி (8.7.2016) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் திருப்புவனம் முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோயிலை வந்தடைகிறது.
நிகழ்ச்சி நிரல்:
9.7.2016 (சனிக்கிழமை)
காலை: 8.30 மணிக்கு- தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜை, விப்ரஅனுக்ஞை, வாஸ்து சாந்தி, ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஸ்ரீலெட்சுமி குபேரதனாகர்ஷன ஹோமம், ஸ்ரீநவக்ரஹ ஹோமம், ஹோமார்த்த கிரியாலக்ன சுபமுகூர்த்த பத்திரிக்கை படனம், நாளிகேர தாடணம், ப்ரதிஷ்டா சங்கல்யம், பூர்ணாஹுதி தீபாராதனை.
மாலை: 4.30 மணிக்கு- விக்னேஸ்வர பூஜை, பிரவேசபலி, ரஷோக்னம், ம்ருத்ஸங்க்ரஹனம், அங்குரார்ப்பணம், ஆச்சார்ய வந்தனம், ரக்ஷாபந்தனம், பூதசுத்தி, விஷேசந்தி, கும்பலங்காரம், ஸ்வாமி கலாகர்ஷனம், யாத்ரா தானம், க்ரஹப்ரீதி, ஸ்வாமி யாகசாலா பிரவேஷம், நேத்ர சோதனம், நயலோன் மீலனம், அஷ்டாதச கிரியை, கடஸ்தாபனம், முதற்கால பூஜை ஆரம்பம், அக்னிசங்கிரஹனம், த்ரவ்யாஹுதி, ஷண்ணவதி ஹோமம், எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன ஸ்தாபனம், ப்ராணப்ரதிஷ்டை.
இரவு: 9.00 மணிக்கு- முதற்கால பூர்ணாஹுதி தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல்.
10.7.2016 (ஞாயிற்றுகிழமை)
காலை: 7.00 மணிக்கு- இரண்டாம் கால பூஜை ஆரம்பம் பிம்மசுத்தி, ரக்ஷாபந்தனம், ஸ்பர்ஸாஹுதி
9.15 மணிக்கு- மஹா பூர்ணாஹுதி தீபாராதனை
9.50 மணிக்கு- யாத்ரா தானம், கிரஹப்ரீதி, கடங்கள் புறப்பாடு
10.15 மணிக்கு- விமானம் கும்பாபிஷேகம்
10.30 மணிக்கு-மூலவர் கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம், அன்னதானம்.
கும்பாபிஷேகம் நடத்தி வைப்பவர் சிவஸ்ரீ பால-சிவாத்மஜன் சிவாச்சாரியார்.
தொடர்புக்கு:
ஆலய ஸ்தாபகர்: குருநாதர்
கே. போஸ் சுவாமி - 90439 73904
எஸ். பாலமுருகன்- 81220 83220
எம். செண்பகம்- 99941 67225
ஜே.என். சசிஹரன்- 94430 70126