பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
11:07
திருத்தணி: திருத்தணி ஊராட்சியில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூர் காலனியில், நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. காலையில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, பூ கரகம், இரவு, 8:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், பின், நாடகமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.