நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூரில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில், திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். நாகூரில், சமையா காதர் மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. காலை, 7:30 மணிக்கு துவங்கிய சிறப்பு தொழுகை, 8:00 மணிக்கு நிறைவடைந்தது. சிறப்பு தொழுகை யில், பெண்கள் உட்பட, 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.