சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2016 10:07
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி தெருவடைச்சானில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு தினம் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. சன்னதியில் தீட்சிதர்களின் பாராயணம் நடக்கிறது. காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் சிவகாமி சுந்தரி ஆனந்த நடராஜ பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 9ம் நாள் உற்சவமான 9ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி மகா தரிசனம், சித்சபா பிரவேசம் உற்சவம் நடக்கிறது.