Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மாணிக்கவாசகர் குரு பூஜை! வேளச்சேரி ராமர் கோவில் சம்ரோக்ஷணம் வேளச்சேரி ராமர் கோவில் சம்ரோக்ஷணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி ஆடி முளைக்கொட்டு உற்சவம்: ஆகஸ்ட் 3ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி ஆடி முளைக்கொட்டு உற்சவம்: ஆகஸ்ட் 3ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
12:07

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக., 3ம் தேதி வாஸ்து சாந்தியுடன் ஆடி முளைக்கொட்டு உற்சவம் துவங்குகிறது.கோயில் இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது:’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற கூற்றின்படி விவசாயிகள் ஆடியில் விதை விதைத்தும், நாற்று நட்டும் விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விவசாயிகள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். இதன்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள விழாக்கள் நான்கு. அவை ஆடி முளைக்கொட்டு, ஐப்பசி கோலாட்டம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகும்.

ஆடி முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு ஆக., 4 முதல் ஆக., 8ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும். அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதியில் நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார். நாதஸ்வரக் கலைஞர்கள் ’கொட்டு மேளம்’ சிறப்பு இன்னிசையை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்ப்பர். ஏழாம் நாள் விழாவாக ஆக.,10ம் தேதி இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. ஆக.,3ம் தேதி வாஸ்து சாந்தி துவங்கி ஆக.,14ம் தேதி மீனாட்சி அம்மன் சேத்தி சேரும் வரையிலும் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அம்மனுக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், கடந்த 16 நாட்களில், 55 ஆயிரம் பக்தர்கள் மலையேறி, சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சூலூர்; முத்துக் கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவிலில், குண்டம் மற்றும் தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar