திருப்பதி: ஏழுமலையான் தரிசன முன்பதிவுக்கு, புதிய, மொபைல் -ஆப் வசதியை, தேவஸ்தானம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.திருமலையில் வாடகை அறைகளுக்கு எளிதாக முன்பதிவு செய்ய வசதியாக, தேவஸ்தானம் புதிய தலைமுறை இணையதளத்தை துவங்கியது. 10 நிமிடத்திற்குள், பக்தர்களால் முன்பதிவு செய்ய முடிகிறது. இதை தற்போது, மொபைல்- ஆப் மூலம் அளிக்க, தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. இதற்கு, டாடா கன்சல்டன்சி நிறுவனம், தொழில்நுட்ப ஆதரவு அளித்து வருகிறது. மூன்று மாதத்திற்குள், மொபைல் - ஆப் வசதி நடைமுறைக்கு வரும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.