அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2016 12:07
மேலுார்,:மேலுார் அருகே நாவினிப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. நாவினிப்பட்டி நா.கோயில்பட்டியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் இத்திருவிழா ஆனியில் நடக்கும். முக்கிய நிகழ்வாக ஜூன் 24ல் நாவினிப்பட்டி மந்தையில் கிராமத்து பெரியவர்கள் தலைமையில் ஐந்து கிராமத்தினர் ஒன்று கூடி சாமி குதிரை செய்ய கூனுத்துப்பட்டி தங்கவேல் குடும்பத்தினரிடம் பிடி மண் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 15 நாட்கள் கடும் விரதமிருந்தனர்.நேற்று வடக்கு நாவினிப்பட்டியில் இருந்து கிராமத்து குதிரைகள், நேர்த்திக்கடன் குதிரைகள், பதுமை, பைரவர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் தெற்கு நாவினிப்பட்டி மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். ஜூலை 11ல் நா.கோயில்பட்டி அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விழாவில் இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.