பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
விழுப்புரம்: வெள்ளையூர் வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, வெள்ளையூர் செல்வ விநாயகர்,ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 9:15 மணிக்கு கும்ப புறப்பாடு நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் மடாதிபதி சுவாமி ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமி தலைமையிலும், டாக்டர் ரங்காச்சாரியார் சுவாமி முன்னிலையில், காலை 10:15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பெருமாள் ஸம்வத்ஸர திருமஞ்சனமும், மாலை சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில், ஐகோர்ட் வழக்கறிஞர்கள் மோகன், விஜயன், கலெக்டரின் ÷ நர்முக உதவியாளர் இளங்கோபிரபு, தாசில்தார் ராஜராஜன், தர்மகர்த்தா ராமசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.