பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவிற்காக கடந்த 5 ம் தேதி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முக்கிய திருவிழாவான ஜூலை 19ல் மாவிளக்கு வழிபாடும், 20 ம்தேதி அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.