Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தசராவில் வேடம் அணியும் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணப்பாடு ஆலயத்தில் மகிமைப் பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2011
11:09

உடன்குடி : மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் மகிமைப் பெருவிழா நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் தென்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இத்திருத்தலத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மை சிலுவையின் சிறிய பகுதி இருப்பது தனிச் சிறப்பாகும். இச்சிறப்புமிக்க ஆலயத்தில் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை திருப்பலிகளும், மாலை பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. நேற்று முன்தினம் மாலை திருச்சிலுவை ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையின் பவனியும், ஆயர் இவோன் அம்புரோஸ்க்கு திருத்தல மேடையில் வரவேற்பும், மாலை திருநாள் மாலை ஆராதனையும் நடந்தது. இரவு புனித யாகப்பர் ஆலயத்திலிருந்து ஊரின் வீதிகள் வழியே மெய்யான திருச்சிலுவை பவனியும் நடந்தது. திருச்சிலுவை மகிமைப்பெருவிழாவையொட்டி காலை பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை ஆலயத்திலும் திருப்பலிகள், மலையாளத்தில் திருப்பலி, திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையினர் பவனியும் ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடந்தது. மாலை பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, கேரளா உட்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மாலையில் கொடியிறக்கம், திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும் நடந்தது. இன்று தூய வியாகுல அன்னை திருவிழாவையொட்டி காலை 5.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் தெயோபிலஸ், கிளைட்டன் மற்றும் பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோயிலில், பரிவேட்டை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar