பேரையூர்: பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, வன்னி வேலம்பட்டி, சத்திரப்பட்டி, கிளாங்குளம், வி.அம்மாபட்டி, காடனேரி, கண்டியதேவன்பட்டி, குண்ணத்துார் உட்பட 20க்கும் மேற் பட்ட கிராமங்களில் பாரி வேட்டை நடந்தது. கண்ணப்பநாயனார் சிவனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், பாரி வேட்டை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 2ம் நாள் கொண்டாடப்படுகிறது. 10 - 60 வயது வரை உள்ள ஆண்கள் தங்கள் ஊர் கோயில்களில் சாமி கும்பிட்டு விட்டு, வேட்டையாடி ஊர்வலமாக ஆடி பாடி வந்தனர்.