பதிவு செய்த நாள்
17
செப்
2011
10:09
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற அஸ்வதி பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். கேரளாவில் இருந்து, இங்கு தேவி தரிசனம் நடத்த வரும் பெண்கள், தலையில் இருமுடி கட்டுடன் வந்து கும்பிடுவதால், இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த கோவில் கடல் குளித்து வழிபாடு நடைபெறும் ஒரு கோவிலாகவும் விளங்கி வருகிறது. இங்கு, ஆவணி மாதம் அஸ்வதி நாளில், பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடி, ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம், ஐஸ்வரியமும், நன்மையும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த பொங்கல் விழாவை, வனத்துறை அமைச்சர் பச்சைமால் மனைவி செல்வஅழகி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றது.