பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
விருத்தாசலம்: விருத்தாசலம், பூதாமூர் செங்கழுனி மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை 7:30 மணியளவில் கொடியேற்றம், 9:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, அம்மன் வீதியுலா நடந்தது. தினசரி அபிஷேக ஆராதனை, வரும் 29ம் தேதி மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மலர் பல்லக்கு மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 7:00 மணிக்கு, மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் செடலணிந்து, அலகு குத்தி, பூங்கரகம், பால்குடம், தீச்சட்டி ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். பின் சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது.