திண்டிவனம்: திண்டிவனம் அன்னை ஸ்ரீசாரதா தேவி சேவா சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் சுலோச்சனா பங்காரு திருமண நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜீலு வரவேற்றார். உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின் யதீஸ்வரி சச்சிதானந்தப்ரியா, ஆசியுரை வழங்கினார். விழாவையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர் கிருபாகரன் மற்றும் தேவிகா, ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.