பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
02:07
திருப்பூர் :திருப்பூரில் விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்தான, ஆலோசனை கூட்டம், நேற்று திருப்பூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சொர்ணகுமார் முன்னிலை வகித்தார்; செயல் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். வரும் ஆக., 25 ம் தேதி திருப்பூரின் அனைத்து வார்டிலும், கிருஷ்ண ஜெயந்தியன்று கோவில்களில் சிறப்பு பூஜை செய்வது, சிறுவர், சிறுமியருக்கு மாறுவேட போட்டி, பெண்களுக்கு கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதே தினம், கிருஷ்ணரின் சிலையுடன் ஊர்வலம் நடத்தி, ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில் நிறைவு செய்து பொதுக்கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. மாநில இணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் நாகராஜ், வி.எச்.பி., பெண்கள் பிரிவின் மாநில அமைப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட பொருளாளர் பூபதி, துணைத்தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.