ஸ்ரீவைகுண்டம் குருசுக்கோயில் சசந்தியாகப்பர் சசர்ச் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2016 02:07
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் குருசுக்கோயில் என்ற சசந்தியாகப்பர் சசர்ச் திருவிழா தேர்ப்பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான சசந்தியாகப்பருக்கு தாமிரபரணி நதிக்கரையில் 416 ஆண்டுகளுக்கு முன்பு சசர்ச் அமைக்கப்பட்டது. இந்த சசர்ச்சில் சசந்தியாகப்பருக்கு ஆண்டு தோறும் திருவிழா ஜூலை 16 முதல் 25 வரை நடக்கும். இந்த ஆண்டு ஜூலை 16 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் காலை 5.30, மாலை 6.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர் நடந்தது. பல்வேறு பட்ட மக்களுக்கான சிறப்பு பிரார்த்தனைகள் பல்வேறு தலைப்புகளில் நடந்தது. ஜூலை 23 ல் புனிதரின் சசப்பர பவனி நடந்தது. நேற்று காலை 4.30 மணிக்கு திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெரு விழா திருப்பலி மணப்பாடு பாதிரியார் இருதயராஜ், அலங்காரதட்டு பாதிரியார் ஜான் செசல்வம் தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சசப்பரத்தில் சசந்தியாகப்பரும் திருத்தேரில் மேரி மாதா பவனியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு சிறப்பு ஆரதனை நடந்தது. நாளை காலை 6 மணிக்கு நன்றி திருப்பலியும் அதனை தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை சசந்தியாகப்பர் சசர்ச் பாதிரியார் ரவீந்திரன், அருட்சசகோதரிகள், ஊர்நலக்கமிட்டியினர் செசய்திருந்தனர்.