நத்தம்: நத்தம்அருகே உள்ள ஊராளிபட்டியிலும் புனித சந்தியாகப்பர் ஆலய விழா நடந்தது. கடந்த விழாழன் அன்று கொடியோற்றம் நடந்தது. தொடர்ந்து 5 நாட்கள் நடந்த விழாவில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, வாண வேடிக்கை முழங்க மின்ரத பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் சேவல் மற்றும் கிடாக்கள் வெட்டியும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை ஊராளிபட்டியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். சாணார்பட்டி: அதிகாரிபட்டி அருகே உள்ள வ ங்கமனுாத்தில் புனித சந்தியாகப்பர் ஆலய விழா நடந்தது. இங்கு கடந்த ஜூலை 23 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று இரவு கபாலமலை சப்பர பவனி மற்றும் அன்னதானம் நடந்தது. மறுநாள் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இரவு வாண வேடிக்கை முழங்க மின்ரத பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பகலில் தேரடி திருப்பலி நடந்தது. தொடர்ந்து பகல் சப்பர பவனி நடந்தது. மாலையில் கூட்டுத்தி ருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது. பிஷப் தாமஸ்பால்சாமி, பாதிரியார்கள் ஜோசப் செல்வராஜ், லாரன்ஸ், ஜெரால்டு கலந்து கொண்டனர்.