ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு விழா: ஆக.,2ல் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2016 01:07
கன்னியாகுமரி : ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஆடி அமாவாசை தினமான அன்று ஏராளமான மக்கள் கடலில் புனித நீராடுவார்கள். இதனால் அன்றைய தினம் மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபடுவதற்கு வழிவகை செய்யும் விதமாகவும், பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.