Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி கோயில்களில் சங்கடஹர ... விளாத்திகுளம் கோயிலில் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
11:09

உடன்குடி : வனத்திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழா செப்.24, அக்.1,அக்.8, அக்15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்தபெருமாள், புரட்டாசி சனிக்கிழமை திருவிழாவையொட்டி வரும் செப்.24, அக்.1, அக்.8 ஆகிய மூன்று சனிக்கிழமையும் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, கோபூஜையும், காலை 6 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரமும், காலை 8.30 மணிக்கு திருவாராதனம் தளிகை, சாத்துமுறை கோஷ்டி நடக்கிறது. நான்காவது சனிக்கிழமை வரும் அக்.15ம் தேதி காலை 5 மணிக்கு நடைதிறப்பும், கோபூஜையும், காலை 6 மணிக்கு மூலவர், உத்ஸவர் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார பூஜையும், காலை 8.30 மணிக்கு திருவாராதனம், தளிகை, சாத்துமுறை கோஷ்டியும், மாலை 6.30 மணிக்கு கருட சேவையையொட்டி பெருமாள் திருவீதி உலாவும் நடக்கிறது. செப்.24, அக்.1, அக்.8, அக்.15 ஆகிய நான்கு சனிக்கிழமையும் ஹோட்டல் சரவணபவன் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிறுவனர் ராஜகோபால் கூறுகையில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து கடந்த 2 1/2 வருடமாகியுள்ளது. மேலும் கோயிலில் மூன்று காலபூஜை நடக்கிறது. உச்சி கால பூஜையின் போது தினசரி கருடன் கொடி மரத்தைச் சுற்றிவருவது தனிச்சிறப்பாகும். பக்தர்களின் வசதிக்காக விரைவில் 22ரூம் ஏசி வசதி கொண்ட செந்தில்முருகன் லாட்ஜ், ராஜகோபால் வணிக வளாகமும் துவங்கப்படவுள்ளது. மேலும் 41 ஏக்கர் பரப்பளவில் நான்கு ரத வீதி கொண்ட வனத்திருப்பதி நகர் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன்கருதி தென்னக ரயில்வே மூலம் நெல்லையில் இருந்து வனத்திருப்பதி மற்றும் திருச்செந்தூர் வனத்திருப்பதி மார்க்கமாக சிறப்பு ரயில் நான்கு சனிக்கிழமையும் இயக்கப்படுகிறது. இது போன்று நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து வனத்திருப்பதிக்கு அரசு மற்றும் தனியார் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஹோட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, சிற்பி கணேசன், கோயில் நிர்வாகி வசந்தன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar