Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி அம்மன் கோயில் காணிக்கை ... தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரகோவில் முருகபெருமானுக்கு மலர் முழுக்கு: தமிழக, கேரள பக்தர்கள் திரளாக பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
11:09

தக்கலை:குமாரகோவில் மலர்முழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மலர்முழுக்கு விழா இந்தாண்டு சிறப்பாக நடந்தது. நிர்மால்ய பூஜையுடன் விழா துவங்கியது. காலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை வேல்முருகன் சேவா சங்கம் சார்பில் அகண்டநாம ஜெபம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 10.30 வரை முருகபெருமானுக்கு விதவிதமான மலர்களால் அபிஷேகம் நடந்தது. மதுரை, நெல்லை, தோவாளை, இரணியல், திங்கள்நகர், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், அருமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட வண்ண வண்ண மணம் கமழும் மலர்களால் சுவாமிக்கு மலர்முழுக்கு விழா நடந்தது.

பூக்களால் கிரீடம், வேல், சேவல்கொடி போன்றவை அமைக்கப்பட்டு சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. இதுபோல் கோயில் உள்பிரகாரம் முழுவதும் மலர் மாலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. சுவாமிக்கு தினை மாவினால் ஆன நெய் விளக்கு, அரவணை, உண்ணியப்பம் நிவேத்யம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அப்போது பக்தர்கள் "வேல்வேல் முருகா... வேற்றிவேல் முருகா... என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வாகனத்தை கோயில் அர்ச்சகர்கள் சுமந்து கோயிலை மூன்று முறை வலம் வந்தனர். பஜனை, நாதஸ்வர கச்சேரி நடந்தது.நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் நிர்மல்குமார், மேலாளர் சிவகுமார், திருவிழாக்குழு தலைவர் குமரிரமேஷ், துணைத்தலைவர் மோகன், செயலாளர் சுனில்குமார், பேட்ரன் பிரசாத், பொருளாளர் செந்தில்குமார், தொழிலதிபர் ராஜேந்திரன், வேல்முருகன் சேவா சங்க தலைவர் டாக்டர் சுகுமாரன், கிரிவல அமைப்பாளர் மணி, செயலாளர் சுகுமாரன் மற்றும் தமிழக, கேரள மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar