உடுமலை : உடுமலை லலிதா சகஸ்ரநாம சத்சங்கத்தின் 500வது கூட்டு வார வழிபாடு நிகழ்ச்சி கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் நடந்தது. இதில், கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தரேசுவரன், வக்கீல் சோமசுந்தரம் தலைமை வகித்தனர். முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் மாதவ சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, லலிதா சகஸ்ரநாம சத்சங்க மலர் வெளியிடப்பட்டது. சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.