Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோவில் மஹா ... திருவந்திபுரத்தில் புரட்டாசி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருந்தீசுவரர் கோவில் நந்தவனத்தில் நட்சத்திர செடிகள் வளர்க்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
11:09

திருவான்மியூர் : திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் நந்தவனத்தில், நட்சத்திர செடிகள் வளர்க்கப்பட வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீசுவரர் திருக்கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மருந்தீசுவரருக்கு நந்தவனம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நந்தவனத்தை கோவில் நிர்வாகம் சீரமைத்தது. ரோஜா, மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட செடிகள் வைக்கப்பட்டுள்ளன. உபயதாரர் மூலமாக தற்போது, பராமரிக்கப்பட்டு வரும் இந்த நந்தவனத்தில், மலர் செடிகளுடன் நட்சத்திர செடிகளும் வளர்க்கப்பட வேண்டும், என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இதுகுறித்து, தனலட்சுமி என்ற பக்தர் கூறுகையில், ""ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு செடியென, மொத்தம் உள்ள, 27 நட்சத்திரத்திற்கும் அதற்கான செடிகள் உள்ளன. உதாரணமாக, பரணி நட்சத்திரத்திற்கு நெல்லிச் செடி, கார்த்திகை நட்சத்திரத்திற்கு அத்திச் செடி, ரோகிணி நட்சத்திரத்திற்கு நாவல் செடி என, அனைத்து நட்சத்திரத்திற்கும் அதற்கான செடியுள்ளது.குறிப்பிட்ட நட்சத்திரம் உடையவர்கள், அதற்கான செடியை வழிபடுவதன் மூலம், தோஷங்கள் நீங்கி, வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறமுடியும். நந்தவனத்தில் நட்சத்திரச் செடிகளையும் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,என்றார்.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ""கோவில் வளாகத்தினுள், 27 நட்சத்திரத்திற்கும் அதற்கான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நந்தவனத்திலும் நட்சத்திர செடிகள் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தங்களின் நட்சத்திரத்திற்கான செடிகளை நந்தவனத்தில் வளர்க்க நினைத்தால், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வளர்க்கலாம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar