கருணா சாயிபாபா கோவிலில் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2016 12:08
செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயிபாபா கோவில் ராஜராஜேஸ்வரிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது. செஞ்சியை அடுத்துள்ள காரியமங்கலம் க ருணா சாயிபாபா கோவில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்த னர். மலர் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பின், மகா தீபாராதனை நடந்தது. பூ ஜைகளை பாபா கணேஷ் அய்யர் செய்தார். கோவில் நிர்வாகி ரகுநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.