திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2011 11:09
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு கருடாழ்வார் வீதியுலா நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால், பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.