பதிவு செய்த நாள்
23
ஆக
2016
11:08
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயில் ஆவணி திருவிழா, நேற்று துவங்கியது. ஆக., 31ல் தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடைதிறக்கப்பட்டது. இரவு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் காலையும், மாலையும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கும். ஐந்தாம் நாளான ஆக., 26ல் வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கும். இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாரதனை நடக்கும். ஏழாம் நாளான ஆக., 28ல் காலை 4:30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கும்; அன்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலத்தில் உலா வருவார். ஆக., 29 மாலையில், சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் உலா வருவார். ஆக.,31 காலை 6:30 மணிக்கு மேல், தேரோட்டம் நடக்கிறது. செப்.,2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமி, அம்பாள் உலா வருவர். தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.