ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் குளம் வறண்டதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு ராமன் இந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி இலங்கை சென்றதாகவும், அதனால் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலு க்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோயிலின் வடக்கு , தெற்கு பகுதிகளில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளங்களில் தண்ணீர் எப்போதும் இருப்பது வழக்கம். ஆனால், தற்போது நிலவும் கடும் வறட்சியால் குளம் வறண்டது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆக.,27ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.,5ல் விநாயகர் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தண்ணீரின்றி வறண்டுள்ள குளத்தை மழைக் காலம் துவங்கும் முன் துார்வாரி ஆழப்படுத்த வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.