பதிவு செய்த நாள்
23
ஆக
2016
12:08
புல்லரம்பாக்கம்;புல்லரம்பாக்கத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள, தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடந்த திருவிழாவில், தினசரி, திரவுபதி அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்தன. நிகழ்ச்சியின் இறுதி விழாவான தீ மிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 232 பேர், காப்பு கட்டி தீ மிதித்தனர். இரவு, திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.