திருவண்ணாமலை: திருவண்ணாமலை டவுன், சின்னகடை தெருவில் உள்ள இரட்டை காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு பூசாரியாக மஞ்சுநாத் உள்ளார். நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு பூசாரி கோவிலை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் அம்மன் கழுத்தில் இருந்த, 13 கிராம் தங்க தாலி காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.