Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி லக்ஷ்மீ ஹயக்ரீவர் ... செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா துவக்கம் செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
11:08

நாகப்பட்டினம்: நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் நடுக்கடலில் காட்சியளித்த நாளை நினைவுகூ ரும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடந்தது.

Default Image
Next News

சிவபெருமானின் சோதனையால், மீன் கிடைக்காமல் வறுமையில் வாடிய அதிபத்தர்,  தனது வலையில் சிக்கிய நவரத்தினங்களால் ஆன தங்க மீனை,  வழக்கம்போல சிவபெருமானை நினைத்து, மகிழ்வோடு கடலில் விட்டார். அதிபத்தரின் பக்தியை  மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப  வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி,  காட்சியளித்தார் என்பது புராணம். இதனால், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, போற்றப்படும்  அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வைபவத்தை, நாகை நம்பியார் நகர் மீனவர்கள் ஆண்டுதோறும் வெகு  விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான வைபவத்தை, நாகை நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் நேற்று மதியம் நடத்தினர்.அதையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன்  கோவிலில், இடப வாகனத்தில், தேவியருடன் சிவபெருமான்  எழுந்தருளினார். தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, நாகை புதிய  கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமான் மற்றும் அதிபத்த நாயனாரை, ஆரிய நாட்டுத் தெரு கிராம மீனவர்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர்.  அங்கு, சிறப்பு  தீபாராதனை நடந்தது. பின், அதிபத்த நாயனார் படகில்  சென்று,  கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான   பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar