பதிவு செய்த நாள்
31
ஆக
2016
11:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 10ம் நாளான இன்று (ஆக.31) தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். அளிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது .ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.