Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் ... திருவள்ளூர் மாவட்டத்தில் 482 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 482 விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 விநாயகர் சிலைகள் கரைப்பு

பதிவு செய்த நாள்

08 செப்
2016
12:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று, 750 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில், இந்து அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து, 1,625 விநாயகர் சிலைகள், பொது இடங்களில் வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாள் முதல், 11ம் தேதி, வரை நீர் நிலைகளில், விநாயகர் சிலைகளை கரைக்க, இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். மூன்றாம் நாளான நேற்று, மாவட்டம் முழுவதும், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. பொன்னேரி ஏரி, மதுராந்தகம் ஏரி, தழுதாளிக்குப்பம், கடப்பாக்கம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கடலுார்குப்பம், பரமன்கேனிகுப்பம், வடபட்டினம், கோவளம், பாலவாக்கம், நீலாங்கரை ஆகிய கடல் பகுதி என, 12 இடங்களில், விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நீர் நிலைகளில், நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, 750 விநாயகர் சிலைகள் பக்தர்களால் கரைக்கப்பட்டன. நீரில் கரைப்பதற்கு முன், லாரி, வேன், சரக்கு ரக வாகனம், மாட்டு வண்டி என பல்வேறு வாகனங்களில், அலங்காரத்துடன், வரிசையாக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. நீர்நிலை அருகே,சிலைகள் இறக்கப்பட்டு, கற்பூரம் ஏற்றி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், நீர்நிலைகளில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பாதுகாப்பிற்கு, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். - நமது நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar