திருவாடானை : திருவாடானை வடக்குரத வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் தீ சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை பால், பறவை, வேல் காவடிகள் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவு செய்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.