தேவியை சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்று மூன்று வடிவங்களாக வணங்கும் காலமே நவராத்திரி. இவர்களில் சரஸ்வதியை கலைமகள் என்பர்.சரஸ் என்றால் பொய்கை. வதி என்றால் வாழ்பவள். சரஸ்வதி என்றால் மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பது பொருள். லட்சுமி என்னும் சொல்லுக்கு லட்சியத்தை அடையச் செய்பவள் என்று அர்த்தம். லட்சியத்தை அடைய பொருள் வளம் வேண்டும். இதனால் அவள் செல்வத் திருமகள் எனப்படுகிறாள். படிப்பும், பணமும் மட்டும் இருந்தால் மட்டும் லட்சியத்தை அடைந்து விட முடியாது. கற்றதையும், சம்பாதித்ததையும் கொண்டு ஆற்றலுடன் செயல்பட வேண்டும். இதை அருள்பவள் மலைமகளான பார்வதி. ஆக கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை வணங்கும் நாட்களே நவராத்திரி ஆகிறது.