பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
சென்னை: சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழாவை ஒட்டி, ஊஞ்சலுாரில், ரயில்கள் நின்று செல்லும். கரூர் அருகே, ஊஞ்சலுாரில், சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா, டிசம்பரில் நடக்கிறது. இதையொட்டி, மைசூரு - துாத்துக்குடி, எர்ணாகுளம் - காரைக்கால், மும்பை சி.எஸ்.டி., - நாகர்கோவில், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஊஞ்சலுாரில் நின்று செல்லும். மேலும், பாலக்காடு டவுன் - திருச்சி இடையே இயக்கப்படும், பாசஞ்சர் ரயில்களும், இங்கு நின்று செல்லும். இந்த ரயில்கள், இருவழி மார்க்கத்திலும், டிச., 15 முதல், 23 வரை, ஊஞ்சலுாரில், ஒரு நிமிடம் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.