Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரியை முன்னிட்டு காலடியில் ... குருவாயூர் கிருஷ்ணன் கோவில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பு குருவாயூர் கிருஷ்ணன் கோவில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் இனி ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவம் நடத்த ஆலோசனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 அக்
2011
10:10

நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், அடுத்த ஆண்டு முதல் இரண்டு பிரம்மோற்சவ விழா நடத்த ஆலோசிக்கப்படும் என, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கே.பாபிராஜு தெரிவித்தார். திருமலையில், பாபவிநாசனம் செல்லும் வழியில், பிரம்மோற்சவத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சியை, அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், சேர்மன் ஆகிய இருவரும் இணைந்து, நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கு முன், நம் நாட்டை ஆண்டு வந்த மன்னர்கள் காலத்தில், ஒரு ஆண்டுக்கு பத்து பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்பட்டதாக புராண, சரித்திர ஆதாரங்கள் உள்ளன. திருமலை கோவிலில், தற்போது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவம் என, இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இனி, அடுத்த ஆண்டு முதல், உத்தராயண புண்ணிய காலம் எனப்படும், தை மாதம் முதல் (ஜனவரி 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை) ஆனி மாதம் முடிய ஒரு பிரம்மோற்சவமும், தட்சிணாயணம் எனப்படும் ஆடி மாதம் முதல் (ஆகஸ்ட் 15ந் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை) மார்கழி மாத முடிவுக்குள் ஒரு முறை என, ஆண்டுக்கு இரண்டு பிரம்மோற்சவ விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இதுபோன்ற பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், பக்தர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை வெங்கடேசப் பெருமாளின் வாகன சேவை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவது குறித்தும், ஆகம விதிமுறைகள் குறித்தும், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகளிடம் ஆலோசித்த பின், முடிவு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் மண்டலாஷேகம் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை, கே கே புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar