ஜெ., நலம் பெற வேண்டி கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2016 12:10
காட்டுமன்னார்கோவில்: தமிழக முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி குமராட்சி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் விளக்கு பூஜை நடந்தது. கீழக்கரை கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பு திருவிளக்கு பூஜை, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர்.