Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பராய்த்துறை காவிரியாற்றில் ... பொலிவு இழக்கும் பெரிய கோவில்: தொல்லியல் துறை கவனிக்குமா? பொலிவு இழக்கும் பெரிய கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் துலா மாத தீர்த்தவாரி: புனித நீராடிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
06:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலாமாத பிறப்பு தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

Default Image

Next News

கங்காதேவி முதலான அனைத்து புன்னிய நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டிய போது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் பாவச் சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது. அவ்வளவு பெருமை மிக்க துலா உற்சசவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஐப்பசி(துலா மாதம்)மாதம் பிறப்பை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, பரிமளரங்கநாதர் சுவாமி ஆகிய ஐந்து சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தின் இருகரைகளிலும் எழுந்தருளின.

காவிரிக்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த துலாமாத பிறப்பு தீர்த்தவாரியில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் காவிரியில் போதிய தண்ணீர் இன்றி புனி த நீராட முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர். முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், நவம்பர் 6ம் தேதி திருக்கொடியேற்றமும், 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்,14ம் தேதி திருத்தேரோட்டமும், நவம்பர் 15ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சசவமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம்ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா ... மேலும்
 
temple news
செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar