பதிவு செய்த நாள்
18
அக்
2016
10:10
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா விமரிசையாக நடந்தது. அகரத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா அக். 9ல் கண்திறப்பு மண்டபத்தில் சாட்டுதலுடன் துவங்கியது. அக்.10ல் கோயிலில் இருந்து பண்டாரப்பெட்டியும், அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அம்மன் கண்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்பு அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் காலை 11:00 மணிக்கு கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 12:00 மணிக்கு வாகனக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்.
இரவு 12:30 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இன்று பகல் 1:30 மணிக்கு அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணை தலைவர் சக்திவேல், நிர்வாக அதிகாரி ரவிசங்கர், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, துணை தலைவர் சுப்ரமணி, நிர்வாக அதிகாரி சுதர்சன், ரியல் எஸ்டேட் உரிமையாளர் மூர்த்தி, அய்யப்பன், சந்திரமவுலி, பி.ஆர்.டி., கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாகிகள் ராஜாத்தேவர், மணிகண்டன், அருணா சேம்பர் உரிமையாளர் மணிகண்டன், அசோகன், அம்மன் எலக்ட்ரிக்ஸ் உரிமையாளர் பாரத், தாடிக்கொம்பு தி.மு.க., பேரூர் செயலாளர் நாகப்பன், வேல் முருகன் ஏஜன்சி உரிமையாளர் ராமமூர்த்தி, அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, கவுன்சிலர் அமாவாசை உட்பட பலர் பங்கேற்றனர்.