பதிவு செய்த நாள்
18
அக்
2016
11:10
கும்மிடிப்பூண்டி;பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, நேற்று, கருட வாகனத்தில், பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில், அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, சுதர்சன ஹோமம், லட்சார்ச்சனை, பெருமாள் திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று, முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது.கும்மிடிப்பூண்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக, கருட வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.