பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
திருப்போரூர்:திருப்போரூர், கந்தசுவாமி கோவில் உண்டியலில், 21.68 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதுபோல், கோவிலில் உள்ள, எட்டு உண்டியல்கள் திறக்கப்பட்டு, நேற்று எண்ணப்பட்டன. அதில், 21.68 லட்சம் ரூபாய் பணமாகவும், 97 கிராம் தங்கம், 1,320 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.கோவில் உண்டியல்கள், காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி மற்றும் கோவில் செயல் அலுவலர் நற்சோணை ஆகியோரின் முன்னிலையில், திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.