பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை சித்தி விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர், ரயில்வே காலனி விநாயகர், பெரியார் நகர் விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.