கரூர் வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையத்தில் புகழி மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டி அபிஷேகம் நடந்தது. விஷேச கால சிறப்பு பூஜையாக நடந்த விழாவில் சஷ்டியை முன்னிட்டு உச்சி கணபதி , ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமிக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதேபோல் புன்னம் பாலமலை ஸ்ரீ முருகன் சுவாமிக்கும், வேலாயுதம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் ஸ்வாமிக்கும் சஷ்டி விரதம், வளர்பிறை சஷ்டி அபிஷேகங்கள் நடந்தது.