Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் கோவிலில் ... சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை பாலம் மூன்றே நாளில் அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2011
01:10

சபரிமலை : பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஒரு வழிபாதையில் மூன்றே நாட்களில் ராணுவத்தினர் நடை பாலம் அமைத்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இவ்வாறு பக்தர்கள் காத்திருக்கும் கால அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மேலும், உணவு, ஓய்வு, இயற்கை உபாதை போன்றவற்றை நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுவதும் அதிகரித்து வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சன்னிதானம் அருகே மாளிகைப்புறத்தம்மன் கோவில் பகுதியில் இருந்து பஸ்மக்குளம் பின்புறம் வழியாக சந்திராயன் சாலையை அடையும் வகையில் 90 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும் கொண்ட பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டது. இதற்கான பணிகளை விரைவாக, மண்டல மற்றும் மகரஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்பாக அமைத்திடவும், அப்பணிகளை முடிக்க ராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியை கோரவும் முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ராணுவத்தினரின் உதவியோடு அப்பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழு சபரிமலை வந்தனர். அவர்கள் மூன்றே நாளில் பாலத்தை அமைத்து விட்டனர். பெங்களூரில் இருந்து பிரிகேடியர் குர்தீப் சிங் வரும் 10ம் தேதி சபரிமலையில் பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பாலப்பணிகள் முடிந்து விட்டாலும், இணைப்புச் சாலை பணிகள் துவங்கவே இல்லை. இதனால் பாலம் திறப்படுவது தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar