Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்படும்: பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிப்பு! கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்படும்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 14ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 14ல் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 நவ
2016
12:11

பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம், பிரகதீஸ்வரர் கோவிலில், வரும் 14ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்திபெற்றது, புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 46 மூட்டை என 3,450 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, காலை, 9:00 மணி முதல் பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணியளவில் தீபாராதனை நடைபெறும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு, வரும், 14ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு கணக்க விநாயகருக்கு மகாபிஷேகமும், 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. வரும், 14ம் தேதி அன்னாபிஷேகத்திற்கு பின், தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு, லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள சாதத்தினை ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். மேலும், 15ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar