திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு கண்காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2011 01:10
திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. கொலு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த கொலுவில் தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைக்கு தீபாராதனை நடந்தது. திண்டிவனம் ஹேன்ட் அன்ட் ஹேன்ட் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் ராதா குருக்கள், பாலாஜி குருக்கள் செய்தனர்.