பதிவு செய்த நாள்
10
நவ
2016
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 13ல், அன்னாபிேஷகம் நடக்கிறது. இதையொட்டி, அன்று மாலை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என, கோவில் இணை ஆணையர் கூறினார். இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி வரும், 13ல், அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், அன்று மாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. மாலை, 6:01 மணி முதல் வழக்கம் போல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.