Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் ரோப்கார் 35 ... அரவான் திருவிழா குறிச்சியில் துவக்கம் அரவான் திருவிழா குறிச்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

10 நவ
2016
10:11

வால்பாறை: கந்தசஷ்டிவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முருகன் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்காமாண்டு கந்தசஷ்டி விழா கடந்த மாதம், 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவில், கடந்த, 5ம் தேதி சுப்பிரமணிய சுவாமி, அம்மனிடம் பெறப்பட்ட சக்தி வேலுடன், வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், வேலை சூரனை நோக்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.  ஸ்டேன்மோர் சந்திப்பில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பின் காந்திசிலை வளாகத்தில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் மூன்றாவது சூரனான பானுகோபன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மனை, கோவில் வளாகத்தின் முன்பும் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.  அதனை தொடர்ந்து  கடந்த, 6ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் நேற்று முன் தினம் காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், அழகிரி உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar