Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் ... 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்காததால் திருமலையில் பக்தர்கள் தவிப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்காததால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை திருநாளுக்காக விளக்குகள் தயாராகிறது: 65 பைசா முதல் 500 ரூபாய் வரை விலை
எழுத்தின் அளவு:
கார்த்திகை திருநாளுக்காக விளக்குகள் தயாராகிறது: 65 பைசா முதல் 500 ரூபாய் வரை விலை

பதிவு செய்த நாள்

10 நவ
2016
11:11

மானாமதுரை, கார்த்திகை திருநாளுக்காக மானாமதுரையில் விதவிதமான அகல் விளக்குகள் ஒளிர தயாராகி வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். வரும் டிசம்பர் 12ம் தேதி கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கார்த்திகை திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படும். மூன்று நாட்களும் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக மானாமதுரையில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

சாதாரண சிறிய அகல் விளக்கு முதல் அடுக்கு விளக்கு வரை இங்கு தயாரிக்கப்படுகின்றன. கார்த்திகை திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே விளக்குகள் விற்பனைக்கு அனுப்ப தொழிலாளர்கள் தொடங்குவார்கள். இந்தாண்டு ஏராளமான டிசைன்களில் விளக்குகள் தயாராகியுள்ளன. கிளியான் சட்டி,வெற்றிலை விளக்கு,தேங்காய் விளக்கு,மாட விளக்கு, நீரும் நெருப்பும் விளக்கு, ஐயப்பன் விளக்கு,குபேர விளக்கு, விநாயகர் விளக்கு, சர விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 65 பைசா முதல் 500 ரூபாய் வரை விளக்குகளின் டிசைன் வேலைப்பாடுகளுக்கு தகுந்தவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை, திண்டுக்கல், காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விளக்குகளுக்கு வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் ரங்கசாமி கூறுகையில்: கிளியான் சட்டி எனப்படும் சிறிய விளக்கு நாள் ஒன்றுக்கு 150 முதல் 250 வரை தயாரிக்கப்படும்.சர விளக்கு,தேங்காய் மூடி விளக்குகளுக்கு வேலைகள் அதிகம்.இருவர் இணைந்து விளக்கு தயாரிக்க வேண்டும். இதனால் குறைந்த அளவு தான் தயாரிக்கிறோம்.கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விளக்கு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar