பதிவு செய்த நாள்
10
நவ
2016
11:11
திருப்பதி: திருமலையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்காததால், பக்தர்கள் தவித்து வருகின்றனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பல மாநில சுற்றுலா துறை மூலம், பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு, சம்பந்தப்பட்ட சுற்றுலா துறையினர், திருமலையில் உள்ள ஆந்திரா வங்கியில் பணம், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வாங்கி தருவர். மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது. இதனால், சுற்றுலா துறை மூலம், திருமலை வந்த பக்தர்கள், டிக்கெட் வாங்க சென்றபோது, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. இதனால், பல மாநிலங்களில் இருந்து வந்த, 490 பக்தர்கள் டிக்கெட் பெற முடியாமல் தவித்தனர். பின், தேவஸ்தானம், அந்த ரூபாய் நோட்டுகளை பெற்று, தரிசன டிக்கெட் வழங்கியது.