புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, அரசு மருத்துவ மனை அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு, காலை, 9:30 மணிக்கு கும்பா பிஷேகம் நடந்தது. பாலு குருக்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். மதியம் நடந்த சிறப்பு அலங்கார பூஜையில், பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலி சரடு வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.